kolaru pathigam lyrics in tamil, Thirugnanasambandar, திருஞானசம்பந்தர், velan astrology,

Kolaru Pathigam (கோளறு பதிகம்) Lyrics


Kolaru Pathigam (கோளறு பதிகம்) Lyrics by திருஞானசம்பந்தர்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க

எருதேறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக

விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்

வரு காலமான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே!!

How to Chant (Simple Method)

  • Best time: Morning (or anytime with focus)
  • Chant once daily or 11 times on Tuesdays/Saturdays
  • Sit calmly, face East, light a lamp if possible

Kolaru Pathigam is a powerful Tamil devotional hymn sung by Thirugnana Sambandar to remove negative planetary effects (Navagraha dosha). திருஞானசம்பந்தர் (Thirugnana Sambandar) was a 7th-century Shaiva saint and poet from Tamil Nadu, celebrated as one of the foremost among the 63 Nayanmars of Tamil Saivism.

Reduces Planetary Dosha Effects

Even if planets like Saturn (Sani), Rahu, Ketu are unfavorable in your chart, chanting helps neutralize their negative impact.

Protection from Unexpected Problems

This hymn is often chanted before travel or important work.

Mental Strength & Fear Removal

The vibration of the hymn builds inner courage.

Improves Luck & Opportunities

When negativity reduces, naturally opportunities increase.

For Astrology Consultation visit velanastrology.in